search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் பலி"

    • சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) வக்கீல். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.

    இந்த விபத்தில் வக்கீல் சந்திரசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வக்கீல் சந்திரசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பிரபல வக்கீலான இவர் வக்கீல்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரகதீஷ்வர் (வயது 30). வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இவர் தனது சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரகதீஸ்வரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை இடையர் பாளையம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சோபன் பாபு (வயது 33). வக்கீல். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டவர் (28) என்பவருடன் வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டுக்கு சென்றார்.

    வேலை முடிந்ததும் 2 பேரும் இரவு கோவைக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சோபன் பாபு ஓட்டி வந்தார். இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சோபன்பாபு, ஆண்டவர் ஆகியோர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் சோபன்பாபு பரிதாபமாக இறந்தார். ஆண்டவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×